கம்பராமாயணம் - சுந்தர காண்டம் 

வெய்தின் வான் சிறையினால் நீர் வேலையைக் கிழிய வீசி,
நொய்தின் ஆர் அமுதம் கொண்ட நோன்மையே நுவலும் நாகர்,
'உய்தும் நாம் என்பது என்னே? உறு வலிக் கலுழன் ஊழின்
எய்தினான் ஆம்' என்று அஞ்சி, மறுக்கம் உற்று, இரியல்போனார். 21

துள்ளிய மகர மீன்கள் துடிப்பு அற, சுறவு தூங்க,
ஒள்ளிய பனைமீன் துஞ்சும் திவலைய, ஊழிக் காலின்,
வள் உகிர் வீரன் செல்லும் விசை பொர மறுகி, வாரி
தள்ளிய திரைகள் முந்துற்று, இலங்கைமேல் தவழ்ந்த மாதோ. 22

கொட்புறு புரவித் தெய்வக் கூர் நுதிக் குலிசத்தாற்கும்,
கண்புலன் கதுவல் ஆகா வேகத்தான், கடலும் மண்ணும்
உட்படக் கூடி அண்டம் உற உள செலவின், ஒற்றைப்
புட்பக விமானம்தான் அவ் இலங்கைமேல் போவது ஒத்தான். 24

கேழ் உலாம் முழு நிலாவின் கிளர் ஒளி இருளைக் கீற,
பாழி மா மேரு நாண, விசும்பு உறப் படர்ந்த தோளான்,
ஆழி சூழ் உலகம் எல்லாம் அருங் கனல் முருங்க உண்ணும்
ஊழி நாள், வட பால் தோன்றும் உவா முழு மதியும் ஒத்தான். 30

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்